பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ் க்கான கலைமாமணி விருது வழங்கப்படுகிறது
பேராசிரியர் தே. ஞானசேகரன் க்கு- இயற்றமிழ் க்கான கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. நூலாசிரியர் முனைவர் தே. ஞானசேகரன் அவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.
தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர், மள்ளரியத் தத்துவவியலாளர். சுமார் 12 கதைகளைத் தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார்.
அவர்கள் செல்பேசி : 94861 28857
விருது வழங்கும் இடம்
13-02-2011 - 3.30PM
வள்ளுவர் கோட்டம், நூங்கம்பாக்கம் , சென்னை
கலைமாமணி விருது இந்தியாவின் தமிழக அரசினால்ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினைவளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.இது கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் இலக்கியம்,இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்கான அரசு விழாவொன்றில் தமிழக முதல்வர் கலைஞர்களை பாராட்டி விருதுகளை வழங்குவார்
2010 ஆண்டு விருது பெற்றவர்கள்
1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ் 2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ் 3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ் 4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ் 5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர் 6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர் 7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர் 8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர் 9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர் 10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர் 11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர் 12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர் 13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர் 14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர் 15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல் 16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல் 17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர் 18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி 19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்
------------------------------------------------------------------------------------------------------
தேவேந்திர குல வேளாளர் சுய மரியாதை மீட்பு பயணம் தேவேந்திர குல சொந்தங்களே வணக்கம்.
தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசு திரு .ஜன்னார்தனம் நீதி அரசர் தலைமையில் ஒரு நபர் கமிசன் அமைத்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் என்று உடனடியாக அறிவித்து இருக்க வேண்டும்.
பிப்ரவரி 2011 க்குள் அறிவிக்கப்பட வேண்டும்.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆக்கப்பூர்வமாக முடிவு எடுங்கள் சொந்தங்களே.
தேர்தலுக்கு முன் நடந்தாக வேண்டும் .
தேவேந்திர குல வேளாளர் சுய மரியாதை மீட்பு பயணம் வரும் பிப்ரவரி மதம் 12 ம் தேதி மதுரையில் இருந்து பெரியவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 10 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும்; தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் அளிக்கப்பட்ட கோரிக்கை கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், எஸ். பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறைச் செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கோரிக்கையைச் சட்ட ரீதியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்திட; நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து, பரிந்துரை பெறலாம் என்று முதல்வர் கலைஞர் இன்று (26 1 2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இமானுவேல் சேகரனாரின் தபால்தலை